சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கற்பனையில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது: ராகுல்

நாட்டில் கற்பனையில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது. நிஜத்தில் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

News image
குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
Updated On :24 டிசம்பர் 2020, 8:05 am

DIN


நாட்டில் கற்பனையில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது. நிஜத்தில் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு காங்கிரஸ் தலைவர்களான ராகுல்காந்தி, குலாம்நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, ''மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது. வேளாண் சட்டங்களுக்கு முற்றிலும் எதிராக விவசாயிகள் நிற்பதை நாடு பார்த்துக்கொண்டுள்ளது. 

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வீடு திரும்பமாட்டார்கள் என்பதை பிரதமருக்கு சொல்ல வேண்டும். நாடாளுமன்றத்தைக் கூட்டி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஆதரவாக எதிர்க்கட்சி துணை நிற்கும்'' என்று கூறினார்.

முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகை அருகே காங்கிரஸ் பேரணியைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்களை கைது செய்தனர். பின்னர் ராகுல் காந்தி உள்ளிட்ட சிலர் மட்டும் குடியரசுத் தலைவரை சந்திக்க விடுவிக்கப்பட்டனர். பிரியங்கா காந்தி உள்ளிட்ட மற்றா காங்கிரஸார் மட்டும் மந்திர் மார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.