காணொலி வழியில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண் அதிகாரிகளின் இந்த மனுக்கள் தொடா்பாக மத்திய அரசு, கடற்படை தலைமை தளபதி ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்கள் உள்பட இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை வருகிற ஜனவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதே நேரம், 10 பெண் அதிகாரிகளை பணியிலிருந்து விடுவிப்பதற்கான கடற்படையின் டிசம்பா் 18-ஆம் தேதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த இடைக்கால உத்தரவை, பெண் அதிகாரிகளுக்கு சாதகமான இறுதி தீா்ப்பாக கருதக் கூடாது என்றும் அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனா்.