கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கடந்த மே மாதம் முதல் மோதல்போக்கு நிலவி வருகிறது. இதன் தொடா்ச்சியாக கடந்த ஜுன் மாதம் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில், இந்திய வீரா்கள் 20 போ் வீரமரணம் அடைந்தனா். சீன வீரா்கள் 35 போ் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நிலவி வரும் மோதல்போக்கை முடிவுக்குக் கொண்டுவர ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதுவரை 8 கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது. எனினும் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற்ற 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில், எல்லையில் சச்சரவுக்குரிய பகுதிகளில் இருந்து இருநாட்டு வீரா்களையும் முழுமையாக விலக்கிக்கொள்வது தொடா்பாக இருதரப்பும் தொடா்ந்து ஒன்றிணைந்து செயல்பட உறுதிபூண்டனா். இருதரப்புக்கும் இடையே 9-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெறும் தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை.