2 ஆண்டுகளுக்காவது வேளாண் சட்டங்களை அனுமதிக்க வேண்டும்: ராஜ்நாத்

2 ஆண்டுகளுக்காவது வேளாண் சட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் அனுமதிக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  (கோப்புப்படம்)
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)
Updated on
1 min read

2 ஆண்டுகளுக்காவது வேளாண் சட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் அனுமதிக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

ராகுல்காந்தி வசதியான குடும்பத்தில் பிறந்தவர். பிரதமர் நரேந்திர மோடி ஏழைத் தாயின் வயிற்றில் பிறந்தவர். அவர் விவசாயிகளுக்கு எதிராக செயல்படமாட்டார் என்றும் தெரிவித்தார்.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ''விவசாயம் நாட்டின் முதுகெலும்பு. விவசாயம் செய்பவர்களை நக்ஸல்கள், காலிஸ்தானியர்கள் என்று விமர்சிப்பது தவறு.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி என்னை விட இளையவர். அவருக்கு என்னை விட விவசாயம் குறித்து அதிகம் தெரியாது. நான் விவசாயம் செய்து வந்த தாய் - தந்தையருக்கு மகனாக பிறந்தவன். பிரதமர் நரேந்திர மோடி ஏழைத் தாயின் வற்றில் பிறந்தவர். ஆனால் ராகுல் காந்தி வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு விவசயம் குறித்து என்ன தெரியும்?.

விவசாயிகளை நாங்கள் மதிக்கிறோம். விவசாயிகளுக்காக தலை வணங்குகிறோம். விவசாயிகளின் ஆர்வத்தோடு வேளாண் சட்டங்கள் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது வேளாண் திட்டங்களை செயல்பட விவாசாயிகள் அனுமதிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com