ஃபதேபூரின் சாந்திபூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில், ஒரு பெண் மற்றும் அவரது நான்கு மகள்கள் உட்பட ஒரு குடும்பத்தின் ஐந்து பேர் இறந்து கிடந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ஐந்து பேரும் விஷம் குடித்ததாக தெரிய வந்துள்ளது என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) ராகேஷ் குமார் தெரிவித்தார்.
"ரம்பரோஸ் என்ற நபரின் வீட்டிலிருந்து விசித்திரமான வாசனை வருவதாக எங்களுக்கு பக்கத்து வீட்டிலிருந்து தகவல் கிடைத்தது. கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தபோது, அங்கே ஐந்து சடலங்கள் கிடந்ததைக் கண்டோம். வீட்டிலிருந்து விஷம் பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளோம்," என்று குமார் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
"அந்தப் பெண்மணியின் கணவர் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தவறாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் குற்றம் சாட்டினர். இந்தக் காரணத்தினால்தான் மனைவி தனது மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார்" என்று அவர் மேலும் கூறினார்.
காவல்துறை அதிகாரி மேலும் கூறுகையில், அவர்கள் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தப்பியோடிய கணவரைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


