வெட்டுக்கிளித் தாக்குதலை எதிர்கொள்ள விரிவாகத் தயாராகும் ஹரியாணா!
விவசாய நிலங்களில் வெட்டுக்கிளித் தாக்குதலை எதிர்கொள்ள ஹரியாணா தயாராகி வருவதாக மாநில விவசாயத் துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால் தெரிவித்துளார்.

வெட்டுக்கிளித் தாக்குதல்

வெட்டுக்கிளித் தாக்குதல்
சண்டிகர்: விவசாய நிலங்களில் வெட்டுக்கிளித் தாக்குதலை எதிர்கொள்ள ஹரியாணா தயாராகி வருவதாக மாநில விவசாயத் துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால் தெரிவித்துளார்.
ஹரியாணாவின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளித் தாக்குதல் சேதத்தை உண்டாகியுள்ளதாகத் தகவல்கல் வெளியாகின. இதையடுத்து அண்டை மாநிலமான ஹரியாணா வெட்டுக்கிளித் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இதுதொடர்பாக மாநில விவசாயத் துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துளதாவது:
இந்த சூழலை எதிர்கொள்ளவும் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்தும் பொருட்டு விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் 50% தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன.
விவசாயிகள் தங்கள் நிலத்தை ஆய்வு செய்து வெட்டுக்கிளித் தாக்குதல் இருந்தால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இதுதொடர்பாக விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானை ஒட்டியுள்ள எல்லைப்புற மாவட்டங்களான சிஸ்ரா, பதேபாத் மற்றும் ஹிஸார் உள்ளிட்ட மேலும் ஐந்து மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நமது அண்டை நாடான பாகிஸ்தானில் வெட்டுக்கிளித் தாக்குதலின் காரணமாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...