அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

உங்களுக்கு காந்தி டிரெய்லராக இருக்கலாம், எங்களுக்கு அவர் வாழ்க்கை: பிரதமர் மோடி

மகாத்மா காந்தி உங்களுக்கு டிரெய்லராக இருக்கலாம், ஆனால் அவர் எங்களுக்கு வாழ்க்கை என பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தெரிவித்துள்ளார்

News image
Updated On :6 பிப்ரவரி 2020, 7:57 am

DIN


மகாத்மா காந்தி உங்களுக்கு டிரெய்லராக இருக்கலாம், ஆனால் அவர் எங்களுக்கு வாழ்க்கை என பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) உரையாற்றினார். அவர் தன்னுடைய உரையைத் தொடங்கும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காந்தி வாழ்க என்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து, மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி, "இது வெறும் டிரெய்லர்தான்" என்றார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "உங்களுக்கு வேண்டுமானால் காந்தி டிரெய்லராக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அவர் வாழ்க்கை" என்றார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தன்னுடைய உரையைத் தொடங்கினார்.

முன்னதாக, வி.டி. சாவர்க்கர் நினைவைப் போற்றும் வகையில், கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே, மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்தை நாடகம் என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டு பேசினார். இவருடைய இந்தக் கருத்து மிகப் பெரிய சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து தான் காந்திக்கு எதிராக எதுவும் கூறவில்லை என்றும் அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்தார். இவருடைய இந்தக் கருத்துக்கு கட்சி ரீதியாக இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதேசமயம், இந்தக் கருத்துக்கு கட்சி மேலிடத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.