புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லி பேரவைத் தேர்தல்: 62 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி

தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

News image
Updated On :11 பிப்ரவரி 2020, 4:41 pm

DIN


தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

70 பேரவைத் தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் நடைபெற்று வந்தது. தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்த ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 8 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

தில்லியில் ஆட்சியமைக்க 36 இடங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றி பெற்று அசுர பலத்தோடு உள்ளது. இதன்மூலம், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி தில்லியில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.

வாக்கு சதவீதம்:

ஆம் ஆத்மி: 53.57 சதவீதம்

பாஜக: 38.51 சதவீதம்

காங்கிரஸ்: 4.26 சதவீதம் 

தில்லி மக்கள் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் அரவிந்த் கேஜரிவாலுக்கும், ஆம் ஆத்மிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.