புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தேர்தல் எதிரொலி: தில்லி காங்கிரஸுக்கு புதிய பொறுப்பாளர் நியமனம்

தில்லி காங்கிரஸ்ஸின் தலைவர் மற்றும் பொறுப்பாளர் ராஜிநாமா செய்ததையடுத்து, தில்லிக்குப் புதிய பொறுப்பாளரை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :12 பிப்ரவரி 2020, 4:16 pm

DIN


தில்லி காங்கிரஸ்ஸின் தலைவர் மற்றும் பொறுப்பாளர் ராஜிநாமா செய்ததையடுத்து, தில்லிக்குப் புதிய பொறுப்பாளரை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்தனர். இந்தப் படுதோல்வியையடுத்து, தில்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா மற்றும் தில்லி பொறுப்பாளர் பிசி சாக்கோ ஆகியோர் தங்களது பொறுப்புகளை ராஜிநாமா செய்தனர்.

இந்நிலையில் இவர்களது ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, சக்தி சின் கோஹில்லை தில்லியின் இடைக்காலப் பொறுப்பாளராக நியமித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.