ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆந்திரத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

News image
Updated On :14 பிப்ரவரி 2020, 11:26 am

DIN

ஆந்திரத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு பல அதிரடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், ஆந்திரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. வருகிற மார்ச்ச் 5ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் உள்ளாட்சி அமைப்புகளில் சில மாற்றங்களை செய்யவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில தகவல் தொடர்புத்துறை அமைச்சர் நானி தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும், உள்ளாட்சித் தேர்தலின்போது யாரேனும் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். தேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் தற்போது 3 முதல் 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.