ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வெளிநாடு செல்ல தில்லி நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கும் காங்கிரஸ் தலைவர்

சஷி தரூர் தில்லி நீதிமன்றத்தில் வெளிநாட்டுக்கு செல்ல விண்ணப்பத்துள்ளார்.

News image
Updated On :18 பிப்ரவரி 2020, 10:20 am

சஷி தரூர் தில்லி நீதிமன்றத்தில் வெளிநாட்டுக்கு செல்ல விண்ணப்பத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் இங்கிலாந்து, பாரிஸ் மற்றும் நோர்வே செல்ல முடிவெடுத்தார். அதற்கான விண்ணப்பத்தை தில்லி நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அனுமதி கோரியுள்ளார்.

இது குறித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இந்த விவகாரம் பிப்ரவரி 22 ம் தேதி விசாரிக்கப்படும்.

சஷி தரூர், அவரது மனைவி சுனந்தா புஷ்கரின் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.

சுனந்தா புஷ்கர் ஜனவரி 17, 2014 இரவு நட்சத்திர ஹோட்டலின் அறையில் இறந்து கிடந்தார். பின்னர் தரூர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் கொலை மற்றும் வன்முறை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 

விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கும்போது, நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி குற்றம் சாட்டப்பட்டவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையை விதித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.