திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கேரள மூத்த பத்திரிகையாளர் எம்.எஸ்.மணி காலமானார்

கேரளாவின் மிகப்பெரிய பத்திரிகையாளர்களில் ஒருவரும், கலா கவுமுதி நாளிதழின் தலைமை ஆசிரியருமான எம்.எஸ்.மணி செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 79. 

News image
Updated On :18 பிப்ரவரி 2020, 9:31 am

DIN

கேரளாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், கலா கவுமுதி நாளிதழின் தலைமை ஆசிரியருமான எம்.எஸ்.மணி செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 79. 

கலா கவுமுதி எனும் நாளிதழின் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் எம்.எஸ்.மணி. இவர் நவம்பர் 4, 1941 அன்று கொல்லத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் கே. சுகுமாரன் - மாதவி சுகுமாரன். மலையாள இலக்கியம் மற்றும் பத்திரிகையாளரான மறைந்த சி.வி.குஞ்சி ராமனின் பேரன் ஆவார்.

பி.எஸ்சி படித்தபோது மாணவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றார். 1961ம் ஆண்டில் கேரள கவுமுதியில் நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தில்லி நாடாளுமன்ற நிருபராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1965ல் தந்தையுடன் இணைந்து கேரள கவுமுதியின் தலைமைப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். 

இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், அகில இந்திய செய்தித்தாள் தொகுப்பாளர்கள் மாநாட்டின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். அம்பேத்கர் மற்றும் கேசரி விருதுகளைப் பெற்றவர்.

குமாரபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்துவந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை(பிப்ரவரி 18) காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

'அவரது மறைவு பத்திரிகைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. பத்திரிகை உலகில் அவர் செய்த பங்களிப்பு எப்போதுமே பாராட்டப்படும். மேலும் திறமைமிக்க ஒரு பத்திரிகையாளர் குழுவைக் கட்டமைத்த பெருமை அவருக்கு உண்டு' என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.