புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தில்லியில் தொடரும் போராட்டம்; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

தில்லி ஜாஃப்ராபாத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

News image
Updated On :23 பிப்ரவரி 2020, 4:33 am

DIN

தில்லி ஜாஃப்ராபாத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்  ஜஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதீயில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை ஜஃப்ராபாத் சாலையில் இருந்து ராஜ்காட் வரை மேற்கொள்ளப்படவிருந்த போராட்டக்காரர்களின் நடை பயணத்திற்கு தில்லி போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.