தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

புதிய தலைமையின் கீழ் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) தலைவராக ராஜேந்தர குமார் பொறுப்பேற்ற பின் முதல் கூட்டம் செவ்வாயன்று தில்லியில் நடைபெற்றது. 

News image
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்
Updated On :25 பிப்ரவரி 2020, 11:43 am

டி. ராமகிருஷ்ணன்

புது தில்லி: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) தலைவராக ராஜேந்திர குமார் பொறுப்பேற்ற பின் முதல் கூட்டம் செவ்வாயன்று தில்லியில் நடைபெற்றது. 

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகு நடைபெறும் ஐந்தாவது கூட்டம், தில்லி ராமகிருஷ்ணா புரத்தில் உள்ள  மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதிய தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் இந்தக் கூட்டம் தொடங்கியது. இதில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் தலைவர் நவீன் குமார் கலந்து கொண்டார்.  தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன்,  காவிரி தொழில்நுட்ப குழு தலைவர்  சுப்பிரமணியன்,  திருச்சி மண்டல  தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி,  காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர்  பட்டாபிராமன்,  திருச்சி மண்டல உதவி செயற்பொறியாளர்  கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சித்துறை ஆணையரும், கல்வித்துறைச் செயலருமான ஏ. அன்பரசு, மற்றும் கேரளம், கர்நாடக மாநில உயரதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.  ஆணையத்தின் அடுத்தக் கூட்டம் ஜுன் மாதம் 25-ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Story image

இக் கூட்டத்தினை தொடர்ந்து மாலை 3 மணி அளவில் காவிரி ஒழுங்காற்றுக்குழு (CWRC) 26-ஆவது  கூட்டம்,  அக்குழுவின் தலைவர்  நவீன்குமார்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பாக திருச்சி மண்டல தலைமை பொறியாளர்  ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர்  சுப்பிரமணியன், காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் பட்டாபிராமன், திருச்சி மண்டல உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.