தில்லி வன்முறையின் கோரமுகம்: உளவுத் துறை அதிகாரி உடலில் 250 இடங்களில் கத்திக்குத்து

வடகிழக்கு தில்லியில் வன்முறை பாதித்த சந்த் பாக் பகுதியில் உளவுத் துறை அதிகாரி அங்கித் சர்மா, சமூக விரோதக் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். 
தில்லி வன்முறையின் கோரமுகம்: உளவுத் துறை அதிகாரி உடலில் 250 இடங்களில் கத்திக்குத்து
Updated on
1 min read

வடகிழக்கு தில்லியில் வன்முறை பாதித்த சந்த் பாக் பகுதியில் உளவுத் துறை அதிகாரி அங்கித் சர்மா, சமூக விரோதக் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். 

அவரது உடல் அப்பகுதியில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் இருந்து செவ்வாய்கிழமை மீட்கப்பட்டது. இக்கொலைச் சம்பவத்தில், அப்பகுதி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் முக்கிய பங்கு வகித்ததாக அங்கித் ஷர்மாவின் பெற்றோர் உள்பட அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

அவரது உடலில் 250 இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தில்லி வன்முறையின் ஒரு கோரமுகமாகப் பார்க்கப்படுகிறது.

தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, சமூக விரோதக் கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏராளமான வீடுகளும், கடைகளும் தீக்கிறையாகின. ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com