உத்தரப் பிரதேசத்தில் டயர் உருக்கு ஆலையில் கொதிகலன் வெடித்ததில் பெண் ஒருவர் பலியானார்.
உத்தரப் பிரசே மாநிலம், சாம்லி மாவட்டத்தின் ஹம்ராஜ்பூர் கிராமத்தில் உள்ள டயர் உருக்கு ஆலையில் நேற்று கொதிகலன் திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் ஷர்மிளா என்கிற பெண் பலியானார்.
சங்கீதா மற்றும் மன்சூர் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.