அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

புதுமை, காப்புரிமை, உற்பத்தி மற்றும் முன்னேற்றம் தான் நமது குறிக்கோள்: பிரதமர் மோடி

நாட்டின் இளம் விஞ்ஞானிகள் புதுமையான படைப்புகளை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்று அதனை உற்பத்தி மற்றும் முன்னேற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். 

News image
Updated On :3 ஜனவரி 2020, 7:04 am

DIN

நாட்டின் இளம் விஞ்ஞானிகள் புதுமையான படைப்புகளை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்று அதனை உற்பத்தி மற்றும் முன்னேற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். 

இந்திய அறிவியல் கூட்டமைப்பின் 107-வது அமர்வு பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது,

புதிய ஆண்டு மற்றும் புதிய தசாப்தத்தின் தொடக்கத்தில் எனது முதல் நாள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளுடன் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 2020-ஆம் ஆண்டை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் நேர்மறையான நம்பிக்கையுடன் தொடங்கும்போது, ​​நமது கனவு அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கிறது.

புதிய கண்டுபிடிப்புகளின் பட்டியலில் இந்தியா 52-ஆவது இடத்துக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். நமது நாட்டின் திட்டங்கள் முந்தைய 50 ஆண்டுகளை விட கடந்த 5 ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியிலான வணிக வளர்ச்சியை உருவாக்கியுள்ளன. இச்சாதனைகளுக்காக நமது விஞ்ஞானிகளை வாழ்த்துகிறேன்.

விண்வெளி ஆராய்ச்சியில் நாம் பெற்ற வெற்றிகளைப் போன்று ஆழ்கடல் ஆராய்ச்சியிலும் பிரதிபலிக்க வேண்டும். நீர், ஆற்றல், உணவு மற்றும் தாதுக்களின் பரந்த கடல் வளங்களை நாம் ஆராய்ந்து அதனை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதன் வெற்றியைப் பொறுத்தது. இந்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் எல்லைகளை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த நாட்டிலுள்ள இளம் விஞ்ஞானிகளுக்கான எனது குறிக்கோள் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் புதுமை, காப்புரிமை, உற்பத்தி மற்றும் முன்னேற்றம். இந்த நான்கு படிகள் நம் நாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும்.

புதுமையான படைப்புகளின் மூலம் காப்புரிமை பெறுவோம், அது நமது உற்பத்தியை எளிமையாக்கும். மேலும் அந்த தயாரிப்புகளை நமது நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்லும்போது, ​​அவர்களின் வாழ்வாதாரம் செழிக்கும் என்று நான் நம்புகிறேன், புதுமை என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும், அதுவே புதிய இந்தியாவின் பரிணாமம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.