புது தில்லி: 2018ம் ஆண்டில் இந்திய அளவில் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன.
தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆா்பி) மிகத் தாமதமாக வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவசாயிகளின் தற்கொலை குறைந்திருப்பதாகவும், 6 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் ஒரு விவசாயி தற்கொலைக் கூட பதிவு செய்யப்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக என்சிஆா்பி சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வேளாண் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களில் 10,349 பேர் கடந்த 2018ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கடந்த 2017ல் 10,655 ஆகவும், 2016ல் 11,379 ஆகவும் இருந்துள்ளது. அதே சமயம், 2017ம் ஆண்டிலும் 7 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் ஒரு விவசாயியின் தற்கொலையும் பதிவு செய்யப்படவில்லை.
நாடு முழுவதும் 2018ம் ஆண்டில் மட்டும் 1,34,516 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 17,972 விவசாயிகளின் தற்கொலையுடன் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், 13,896 விவசாயிகளின் தற்கொலையுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


