தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடுமையான மூடுபனியால் 26 ரயில்கள் தாமதம்: தில்லி

தலைநகர் தில்லியில் (என்.சி.ஆர்) இன்று அதிகாலை பெரும்பாலான பகுதிகளில் மூடுபனி கடுமையாக இருந்தது.

News image

அதிகாலை பனியில் செல்லும் ரயில்.

Updated On :11 ஜனவரி 2020, 5:41 am

IANS

தலைநகர் தில்லியில் (என்.சி.ஆர்) இன்று அதிகாலை பெரும்பாலான பகுதிகளில் மூடுபனி கடுமையாக இருந்தது.  இன்று தில்லி குறைந்தபட்சம் 5.8 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்தது, சராசரி பருவத்தை விட இரண்டு டிகிரி குறைவாக இது இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் ஆகும்.

இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) படி, என்.சி.ஆர் வரும் நாட்களில் மேலும் கடுமையான மூடுபனியைக் காணும் என்றது. ஐஎம்டி அதிகாரிகளின் கூற்றுப்படி, காலையில் காட்சிப்பதிவு 800 மீட்டர் வரை இருந்தது மற்றும் ஈரப்பதம் 91 சதவீதம் ஆகும். இதனால் தில்லியில் இருந்து 26 ரயில்கள் சனிக்கிழமை அன்று ஐந்து மணி நேரம் வரை தாமதமாக வந்தன.

காற்றின் தரக் குறியீடு (AQI) 'மிகக் கடுமையான' என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு (சஃபர்) படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) சனிக்கிழமை காலை 302 ஆக பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.