தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஒடிஸாவில் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து: 15 பயணிகள் காயம்

மும்பை - புவனேஸ்வர் இடையே இயக்கப்படும் லோகமான்ய திலக் விரைவு ரயில் ஒடிஸா மாநிலம் கட்டாக் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பயணிகள் காயம் அடைந்தனர்.

News image
Updated On :16 ஜனவரி 2020, 5:47 am

PTI


புவனேஸ்வர்: மும்பை - புவனேஸ்வர் இடையே இயக்கப்படும் லோகமான்ய திலக் விரைவு ரயில் ஒடிஸா மாநிலம் கட்டாக் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பயணிகள் காயம் அடைந்தனர்.

முன்னதாக விபத்து குறித்து செய்தி வெளியிட்ட ரயில்வே அதிகாரிகள், 25 பயணிகள் காயம் அடைந்ததாக தெரிவித்தனர். ஆனால், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய பிறகு, 4 ரயில் பயணிகள் படுகாயம் அடைந்திருப்பதாகவும், 11 பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த பயணிகள் கட்டாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், யாருக்கும் உயிர் ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் பனி மூட்டம் காரணமாக இன்று காலை 7 மணியளவில், சலகோன் மற்றும் நெற்குண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

இவ்விரு ரயில்களின் ஸ்பீட் மீட்டர்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் வந்த பயணிகள் மாற்று வழிகளில் உரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும் பணியும் நடந்து வருகிறது.

இந்த ரயில் விபத்தால், அவ்வழியாக வந்த 5 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விபத்து நிகழ்ந்த உடனே, அருகில் இருந்த ஊர் மக்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணிகளில் மீட்புப் படையினருடன் இணைந்து செயல்பட்டனர். அவர்களுக்கு கிழக்கு மண்டல ரயில்வே நன்றி தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.