குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ககன்யான் திட்டம்: விண்வெளிக்குச் செல்லும் மனித ரோபோ!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், முதலில் மனித உருவிலான ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

News image
Updated On :22 ஜனவரி 2020, 8:29 pm IST

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், முதலில் மனித உருவிலான ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக இறங்கியுள்ளது. விண்வெளிக்கு அனுப்ப 4 விண்வெளி வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்த மாத இறுதிக்குள் ரஷியா சென்று பயிற்சி பெறவுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இத்திட்டத்தின் சோதனை முயற்சியாக, விண்வெளிக்கு அனுப்ப மனித உருவிலான பெண் ரோபோவை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். விண்வெளிக்கு அனுப்ப வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோவை இஸ்ரோ தலைவர் சிவன் இன்று அறிமுக்கப்படுத்தியுள்ளார். நடப்பு ஆண்டு இறுதிக்குள் இந்த ரோபோ விண்ணுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

விண்வெளிக்கு அனுப்ப வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ரோபோவுக்கு ‘வயோமமித்ரா' என பெயரிடப்பட்டுள்ளது. பெண் உருவம் கொண்ட இந்த ரோபோ மனிதர்கள் செய்யும் பல வேலைகளை திறமையாக செய்யக்கூடியது; இரு மொழிகளில் சரளமாக பேசும் திறனுடையது. மனிதப் பண்புகளும் இருப்பதால் விண்வெளியின் மனிதன் சென்று வர ஏதேனும் பிரச்னைகள் இருக்குமா என்பது குறித்தும் உணரக்கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.