இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களில் சமமான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக மூன்று தலைநகரங்கள் குறித்த முடிவை அரசு எடுத்துள்ளது. அதில் பின்வாங்குவதில்லை. விசாகப்பட்டினத்தில் நிர்வாகத் தலைநகர் அமைக்கப்படும். மக்களின் நலனுக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் இதனை அரசியல் ஆக்குகின்றன. எனினும், இத்திட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது. ஆந்திரத்துக்கு 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா தாமதமாகலாம்; ஆனால், கண்டிப்பாக நிறைவேற்றப்படும்' என்று தெரிவித்தார்.