மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சீனாவில் பயிலும் மாணவர்களை அழைத்து வரும் திட்டமில்லை: மேகாலயா அமைச்சர்

சீனாவில் பயின்று வரும் மேகலாயா மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் திட்டம் தற்போது இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :31 ஜனவரி 2020, 12:38 pm

DIN

சீனாவில் பயின்று வரும் மேகலாயா மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் திட்டம் தற்போது இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

சீனாவில் முக்கிய நகரங்களில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை, 5,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று பலர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுவதுமே பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படா வண்ணம் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் வுஹான் நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர ஜனவரி 31ம் தேதி ஏர் இந்தியா விமானம் செல்கிறது.

இதுகுறித்து பேசிய மேகாலயா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஏ.எல் ஹெக் கூறுகையில், 'கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பயின்று வரும் மேகலாயா மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் திட்டம் இல்லை. எனினும், மத்திய அரசின் திட்டம் குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை

மேகாலயாவில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் தாக்கம் இல்லை. யாருக்கேனும் கரோனா வைரஸ் தாக்குதல் குறித்த சந்தேகம் ஏற்பட்டால் முறையாக சிகிச்சை அளிக்கத் தயாராக  இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.