ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் காயமுற்றார்.
தெற்கு காஷ்மீரின் புல்வாமாவின் கோங்கூ பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் அவ்வழியாக சென்று கொண்டிருந்த நிலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததுள்ளது. ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
குறைந்த தீவிரம் கொண்ட ஐ.இ.டி குண்டுவெடிப்பு என்பதால் உயிரிழப்பு எதுவும் நிகழாவில்லை. ஒருவருக்கு கையில் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.