நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கேரள தங்கக் கடத்தல்: குற்றவாளி ஸ்வப்னாவின் ஜாமீன் மனு ஜூலை 14-க்கு ஒத்திவைப்பு

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் இவ்வழக்கை பராமரிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

News image
கேரள ஐ.டி. பிரிவு அதிகாரி ஸ்வப்னா
Updated On :10 ஜூலை 2020, 11:50 am

DIN

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், என்ஐஏ சட்டப் பிரிவு 21 ன் கீழ், தேசிய புலனாய்வு அமைப்பு இவ்வழக்கை விசாரிக்கும் நிலையில், குற்றவாளியின் ஜாமீன் மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்றும், இது சிறப்பு நீதிமன்றத்தால் மட்டுமே பரிசீலிக்கப்பட முடியும் என்றும் மத்திய அரசு ஆலோசகர் ரவி பிரகாஷ் கூறினார்.

அரசு தரப்பு வழக்கறிஞரின் கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விசாரணையை ஜூலை 14-க்கு ஒத்திவைத்தது. மேலும், தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்) நகலை, குற்றவாளி ஸ்வப்னா சுரேஷின் வழக்கறிஞருக்கு வழங்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணையை எடுத்துக் கொண்டதுடன் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.