நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை 8 நாள்கள் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை 8 நாள்கள் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
Updated On :13 ஜூலை 2020, 11:11 am

DIN


கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை 8 நாள்கள் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீர் நாயரை என்ஐஏ அதிகாரிகள் பெங்களூருவில் வைத்து சனிக்கிழமை கைது செய்தனர். இதன்பிறகு, அவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை கேரளம் அழைத்து வரப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் கொச்சியிலுள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை 8 நாள்கள் என்ஐஏ காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு விவரம்:

திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் தங்கக் கடத்தல் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஒரு துணை நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிவந்த ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, தலைமறைவானவர்களை என்ஐஏ தேடி வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டுவந்த சந்தீப் நாயருடன் பெங்களூரில் பதுங்கியிருந்த ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கேரளம் அழைத்து வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.