அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும்: பிரதமர் மோடி

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :17 ஜூலை 2020, 3:54 pm

DIN

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஐநா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தில்லியில் இருந்தபடி காணொலி மூலம் உரையாற்றினார். அதில், உலக நாடுகளை கரோனா வைரஸ் தொற்று சோதித்து வருகிறது. கரோனாவுக்கு எதிரான போரை மக்கள் யுத்தமாக இந்தியாவில் மாற்றி உள்ளோம். 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் இந்தியா செல்படுகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. தூய்மை பணிக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 50 கோடி இந்தியர்களை உள்ளடக்கி மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்துகிறது. 

உலகில் ஆறில் ஒருவர் வாழும் இடமாக இந்தியா திகழ்கிறது. கரோனா பாதித்த 150 நாடுகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையில் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது. உலகிலேயே கரோனாவிலிருந்து விரைவாக மீளும் நாடாக இந்தியா உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.