பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனாவுக்கு பலியாகும் ஆஷா, அங்கன்வாடி ஊழியர்களின் வாரிசுக்கு மாத ஓய்வூதியம்: ஒடிசா அரசு

கரோனா பாதித்து பலியாகும் ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் வாரிசுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என்று ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2020, 11:42 am

புவனேஸ்வர்: கரோனா பாதித்து பலியாகும் ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் வாரிசுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என்று ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, கரோனா பாதித்து மரணம் அடையும் அங்கன்வாடி ஊழியரின் வாரிசுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.7,500 மாதந்தோறும் வழங்கப்படும் என்றும், ஆஷா ஊழியர் மரணம் அடைந்தால் அவர்களது வாரிசுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று சிறப்பு நிவாரண ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு எதிரான போரில் முன்களத்தில் நின்று பணியாற்றும் அங்கன்வாடி மற்றும் ஆஷா ஊழியர்கள் கரோனா பாதித்து பலியாகும்பட்சத்தில் அவர்களது நேரடி வாரிசுக்கு மாத உதவித் தொகை வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு 60 வயதாகும் வரை அல்லது அவர்கள் உயிரோடு இருக்கும் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.