எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இன்று மாலை கூடுகிறது ராஜஸ்தான் அமைச்சரவைக் கூட்டம்

​ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

News image
​ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. (கோப்புப்படம்)
Updated On :21 ஜூலை 2020, 10:29 am

DIN


ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவைக் குழுக் கூட்டங்களில் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. இதையடுத்து, துணை முதல்வர் மற்றும் மாநிலத் தலைவர் பதவிகளிலிருந்து பைலட் நீக்கப்பட்டார். தொடர்ந்து காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில் தகுதி நீக்கம் விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு பைலட் உள்பட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து பைலட் தரப்பு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் மீது நோட்டீஸ் தொடர்பாக 24-ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பேரவைத் தலைவரை கேட்டுக்கொண்டதோடு, வழக்கின் தீர்ப்பை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

இந்த நிலையில், இன்று மாலை அசோக் கெலாட் இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.