சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தில்லியில் கொட்டித் தீர்த்த மழை; மேலும் இரண்டு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

தில்லியில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News image
தில்லியில் கொட்டித் தீர்த்த மழை; மேலும் இரண்டு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை
Updated On :21 ஜூலை 2020, 8:26 am

PTI


புது தில்லி: தில்லியில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தில்லியின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழை பரவலாக பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி, இமாச்சல், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவலாக அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை  பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

48 மணி நேரத்துக்குப் பிறகு மழையின் தீவிரம் மெல்ல குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த இரண்டு நாள்களாக தில்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தில்லி வாழ் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழை காரணமாக 4 பேர் மரணம் அடைந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.