இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அசாம் வெள்ளம்: திப்ருகர் நிவாரண முகாம்களில் 95க்கும் மேற்பட்ட குடும்பங்கள்

அசாம் மாநிலம் திப்ருகர் அருகிலுள்ள ரங்மோலா மற்றும் மிரி கிராமங்கள் வெள்ளப்பெருக்கில் மூழ்கிய நிலையில் சுமார் 95 குடும்பங்கள் தற்போது முகாம்களில் வசித்து வருகின்றன.

News image

திப்ருகரில் நிவாரண முகாம்களில் வாழும் 95 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்

Updated On :23 ஜூலை 2020, 6:56 am

ANI

அசாம் மாநிலம் திப்ருகர் அருகிலுள்ள ரங்மோலா மற்றும் மிரி கிராமங்கள் வெள்ளப்பெருக்கில் மூழ்கிய நிலையில் சுமார் 95 குடும்பங்கள் தற்போது முகாம்களில் வசித்து வருகின்றன.

இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த தாஸ் என்பவர் கூறுகையில், "எனது கிராமம் முகாமில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தற்போது அந்த கிராமம் முழுவதும் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. சுமார் 95 குடும்பங்கள் அங்கு வசித்து வந்தோம். நாங்கள் பேரழிவிற்கு ஆளாகியுள்ளோம், 120 க்கும் மேற்பட்ட வீடுகள் பிரம்மபுத்ரா நதியில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது, நாங்கள் அனைவரும் அரசு ஏற்படுத்தி தந்துள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். நிவாரண முகாம்ங்களை அரசு காலி செய்யும் சூழல் ஏற்படும்போது நாங்கள் எங்கு செல்வோம் என்று தெரியவில்லை” என்று கூறினார். 

அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 26 மாவட்டங்கள் பாதித்துள்ளது. ஜூலை 22 வரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 26,31,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், பார்பேட்டா, திப்ருகார், கோக்ராஜார், பொங்கைகான், டின்சுகியா உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

புதன்கிழமை, முதற்கட்டமாக அசாமுக்கு வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.346 கோடியை விடுவிப்பதாக மத்தியக்குழு அறிவித்துள்ளது, மேலும் மாநிலத்தின் தாழ்வான பகுதிகளில் மீண்டும் மீண்டும் வரும் வெள்ள பிரச்னையை தீர்க்க பூட்டானுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.