சிங்கப்பூரில் இன்று புதிதாக இரண்டு இந்தியர்கள் உள்பட 334 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதன் மூலம் மொத்த பாதிப்பு 51,531 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
கடந்த 24 மணி நேரத்தில் 334 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கரோனா நோயாளிகளில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள தொழிலாளா்கள் ஆவா்.
இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51,531-ஆக உயா்ந்துள்ளது.