கரையைக் கடந்தது நிசர்கா புயல்: மகாராஷ்டிரத்தில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன
அரபிக்கடலில் உருவான ‘நிசா்கா’ புயல், வடக்கு மகாராஷ்டிரத்தின் அலிபாக் பகுதிக்கு அருகே இன்று கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் வீசியக் காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.











