ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஒடிசாவில் கரோனா பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

ஒடிசா மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :5 ஜூன் 2020, 6:33 am

ஒடிசா மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

கோர்த் மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயது முதியவர் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். இவர் ஏற்கெனவே நீரிழிவு மற்றும் பிற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 

ஒடிசாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி மேலும் 130 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,608 ஆக உயர்ந்துள்ளது. மொத்த வழக்குகளில் தனிமைப்படுத்தலிலிருந்து 124 பேரில் ஆறு பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்த மாநிலத்தில் 1,481 பேர் இதுவரை நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், 1,117 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.