தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஒடிசாவில் பயிற்சி விமான விபத்து: தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இருவர் பலி

ஒடிசாவில் பயிற்சி விமான விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உட்பட இருவர் பலியானார்கள்.

News image
Updated On :8 ஜூன் 2020, 4:15 am

DIN

ஒடிசாவில் பயிற்சி விமான விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உட்பட இருவர் பலியானார்கள்.

ஒடிசா மாநிலம், தேன்கனல் மாவட்டத்தில் கங்காதஹாத் பகுதியில் பயிற்சி விமானத்தில் கேப்டன் சஞ்சீப் குமார் உட்பட இருவர் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது அந்த விமானம் எதிர்பாரதவிதமாக திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. 

இதில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா மற்றும் பிகாரைச் சேர்ந்த கேப்டன் சஞ்சீப் குமார் ஆகியோர் பலியானார்கள். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.