சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஆந்திரத்தில் இறப்பு விகிதம் 1.33 சதவீதமாகக் குறைந்தது: ஒரே நாளில் 246 பேருக்குத் தொற்று

ஆந்திரத்தில் மேலும் 246 பேருக்குப் புதிதாகத் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 5,086 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில நோடல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :15 ஜூன் 2020, 10:49 am

PTI

ஆந்திரத்தில் மேலும் 246 பேருக்குப் புதிதாகத் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 5,086 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில நோடல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

திங்கள்கிழமை காலை 9 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. 

ஆந்திரத்தில் இறப்பு விகிதம் 1.43 சதவீதத்திலிருந்து 1.33 சதவீதமாகக் குறைந்துள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட தகவலின்படி, இறப்பு விகிதத்தில் இந்தியாவில் 9வது இடத்தை ஆந்திரா பிடித்துள்ளது. இந்தியாவின் இறப்பு விகிதம் திங்களன்று 2.86 சதவீதமாக உள்ளது. 

ஒரே நாளில் 47 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இதுவரை 2,770 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். திங்கள்கிழமை காலை 9 மணி வரை 24 மணி நேரத்தில் 15,173 மாதிரிகளையும் பரிசோதித்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் கரோனா தொற்று அதிகளவில் பதிவாகியுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.