ராஜ்காட்: கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில், ‘குஜராத் மாநிலம் ராஜ்காட்டுக்கு 87 கிமீ வடமேற்கு திசையில் நண்பகல் 12.17 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த் நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகயுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு இரவு இதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவான நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், இது இரண்டாவது அதிர்வு என்பது குறிப்பிடத்தக்கது.