தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
நேற்று இரவு கடும் காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவுக் குறைந்ததன் காரணமாக, தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சற்றுமுன் அவரது பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அதில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
முன்னதாக, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கரோனா தடுப்புப் பணியில் ஓய்வின்றி ஈடுபட்டு வந்ததாகவும், அவர் விரைவில் மீண்டு பணியில் ஈடுபடுவார் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.