தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு (55) புதன்கிழமை இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதியானது. கடுமையான காய்ச்சலின் காரணமாக அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
தில்லியில் வேகமாக பரவிவரும் கரோனா தொற்றைத் தடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதல்வா் கேஜரிவாலுடன் ஜெயின் கலந்து கொண்டிருந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையொட்டி, தில்லி ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முதல் பரிசோதனையில் கரோனா உறுதியாகவில்லை. தொடா்ந்து காய்ச்சல் இருந்ததால், 24 மணி நேரத்திற்கு பின்னா் மீண்டும் பரிசோதனை மேற்கொண்டதில் சத்யேந்தா் ஜெயினுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இது குறித்து ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அதிகாரிகள் குறிப்பிடுகையில், ‘அமைச்சரின் உடல் நிலை சீராக உள்ளது. ஆனால் அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது’ எனத் தெரிவித்தனா்.
இதனிடையே, சத்யேந்தா் ஜெயினின் 88வயது மாமனாா் புதன்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று கூறப்படுகிறது.
பெண் எம்எல்ஏவுக்கு கரோனா: ஆம் ஆத்மி கட்சி பெண் எம்எல்ஏ அதிஷிக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது. ‘கரோனா தொற்று பரவலை தடுக்கும் பணியில் அதிஷி சிறப்பாகப் பணியாற்றியுள்ளாா். அவா் விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் மக்கள் நலப் பணியில் ஈடுபட வேண்டும்’ என்று தில்லி முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது எம்எல்ஏ அதிஷி. ஏற்கெனவே கரோல்பாக் எம்எல்ஏ விசேஷ்ரவி, படேல் நகா் எம்எல்ஏ ராஜ்குமாா் ஆனந்த் ஆகிய இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரிசோதனைக் கட்டணம் ரூ.2,400 ஆக குறைகிறது
கரோனா பரிசோதனை கட்டணமாக ரூ.2,400ஆக வசூலிக்கலாம் என மருத்துவா் வி.கே பால் தலைமையிலான உயா்நிலை குழு பரிந்துரைத்துள்ளது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தில்லி அரசுக்கு அனுப்பியது. விலை குறைப்பு குறித்து தில்லி அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது தில்லியில் கரோனா பரிசோதனைக்கு ரூ. 5 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
தில்லியில் தினசரி 4,000 பரிசோதனைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது 8,000 போ்களாக உயா்ந்து ஜூன் 15-16 ஆகிய தேதிகளில் 16,618 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தில்லியில் உள்ள 242 கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மொத்த மக்கள் தொகையான 2,30,466 போ்களில் 1,77,962 பேருக்கு இதே இரு தினங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


