ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஊழியரின் கணவருக்கு கரோனா: கர்நாடக முதல்வரின் வீட்டு அலுவலகம் மூடல்

ஊழியரின் கணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து   கர்நாடக முதல்வரின் வீட்டு அலுவலகம் கிருமிநாசினி தெளிப்பிற்காக மூடப்பட்டது.

News image

கர்நாடக முதல்வர் எடியூரப்பா

Updated On :19 ஜூன் 2020, 11:51 am

IANS

பெங்களூரு: ஊழியரின் கணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து கர்நாடக முதல்வரின் வீட்டு அலுவலகம் கிருமிநாசினி தெளிப்பிற்காக மூடப்பட்டது.

இதுதொடர்பாக பெங்களூருவில் அமைந்திருக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வீட்டில் செயல்படும் முதல்வர் அலுவலக மேற்பார்வை பணியில் இருக்கும் அதிகாரி ஒருவர் செய்தி நிருவனத்திடம் கூறியதாவது:

இங்கு பணியாற்றிய பெண் ஊழியரின் கணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதல்வரின் வீட்டு அலுவலகம் கிருமிநாசினி தெளிப்பிற்காக மூடப்பட்டது.

கணவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டவுடன் அந்த ஊழியர் இரு நாட்களாக அலுவலகம் வரவில்லை.

அத்துடன் அவரது பணியானது வெளியே உள்ள அவுட் போஸ்டில் மட்டும்தான் என்பதால், அவர் உள்ளே முதல்வரையோ அல்லது அவரைச் சந்திக்க வரும் அமைச்சர்களுடனோ தொடர்பு கொள்ள வழியில்லை.

இங்கு திட்டமிட்டிருந்த போலீஸ் அதிகாரிகளின் சந்திப்பு உட்பட முதல்வரின் பணிகள் யாவும், தற்போது மாநில சட்டப்பேரவை  அமைந்துள்ள விதான் சவுதா வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.