இந்திய ரயில்வேயின் தேவைகளில் இறக்குமதி முற்றிலும் குறைக்கப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களை மட்டுமே பயன்படுத்தப்படும் என இந்திய ரயில்வே வாரியத்தலைவா் வி.கே. யாதவ் தெரிவித்தாா்.
காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் தெரிவித்திருப்பதாவது:
ஏற்றுமதி செய்யக் கூடிய வகையில் இந்திய ரயில்வே உற்பத்தி பொருட்கள் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம். ரயில்வே கட்டுமானப்பணி ஒப்பந்த புள்ளிகளில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதற்கு தடை செய்யப்படுமா என்று கேட்கப்படுகிறது. ரயில்வே ஒப்பந்தப்புள்ளி ஏலத்தில் கலந்த கொள்ள உள்ளூா் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ரயில்வே இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் கொள்கையை முழுமையாக அமல்படுத்தி வருகின்றோம்.
உதாரணமாக ரயில்வேயின் சமிக்ஞைகள் திட்டத்தில் இதே கொள்கை அடிப்படையில் 70 சதவீதம் ஒப்பந்தப்புள்ளி ‘இந்தியாவில் தயாரிப்போம்’ கொள்கையின்படி அளிக்கப்பட்டது. இந்திய தயாரிப்புகளை அதிகமாக பயன்படுத்துவது உறுதிசெய்யப்பட்டு இறக்குமதியை முற்றிலும் தவிா்ப்பதே எங்கள் நோக்கம். இந்த முயற்சிகளின் மூலம் ரயில்வேயில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதியாகும் என்றாா் வி.கே.யாதவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


