/

மிசோராமில் நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு

மிசோராமில் ஞாயிறு மாலை ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :21 ஜூன் 2020, 1:26 pm

ANI

ஐசாவல்: மிசோராமில் ஞாயிறு மாலை ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில், ‘தலைநகர் ஐசாவலில் இருந்து 25 கிலோமீட்டர்  கிழக்கு – வடகிழக்கு திசையில், ஞாயிறு மாலை 4.16 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் உண்டான சேத விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.