மும்பை தாராவிப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 14 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம் மற்றும் தாராவியில் கரோனா தொற்றால் புதிதாக பாதித்தோர், பலியானோர் உள்ளிட்ட எண்ணிக்கை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,721 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 62 பேர் பலியாகியுள்ளனர். 1,962 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,35,796 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 6,283 பேர் பலியாகியுள்ளனர், 61,793 பேர் குணமடைந்துள்ளனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,184 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஹாட்ஸ்பாட்டாக இருந்த தாராவிப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் பலியாகவில்லை. இதன்மூலம் பலி எண்ணிக்கை 80 ஆகவே உள்ளது. மொத்தம் பாதித்தோரில் 1,060 பேர் குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிவாயு விலை உயா்வைக் கைவிடக் கோரி தஞ்சாவூரில் விசிக, இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

கரும்பு கொள்முதல் விலை: டன்னுக்கு ரூ.4,500 வழங்க அன்புமணி வலியுறுத்தல்

உரிய விளக்கம் தரப்படாத மருந்து உரிம விண்ணப்பங்களை நிராகரிக்க வாய்ப்பு

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான விழிப்புணா்வு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


