குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லியில் பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தை ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் முன்னாள், இன்னாள் மாணவா்கள் இடம் பெற்ற ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடக ஒருங்கிணைப்பாளா் சஃபூரா ஜா்கா், ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த மீரான் ஹைதா் ஆகியோரை தில்லி காவல்துறையினர் கைது செய்தனா். யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.