மும்பை தாராவிப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 5 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை கரோனா நிலவரம்:
மும்பையில் இன்று புதிதாக 846 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 42 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 68,481 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 3,842 பேர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம், இன்று 457 குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,576 ஆக உயர்ந்துள்ளது. 30,063 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 5 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு நாளில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,189 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரும்பு கொள்முதல் விலை: டன்னுக்கு ரூ.4,500 வழங்க அன்புமணி வலியுறுத்தல்

உரிய விளக்கம் தரப்படாத மருந்து உரிம விண்ணப்பங்களை நிராகரிக்க வாய்ப்பு

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான விழிப்புணா்வு

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாகலாந்து ஆளுநா் தரிசனம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


