எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பிகாரில் திருமணமான மறுநாளே மணமகன் மரணம்; திருமணத்தில் கலந்துகொண்ட 31 பேருக்கு கரோனா தொற்று

பிகாரில் திருமணமான மறுநாளே மணமகன் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவத்துடன், திருமணத்தில் கலந்துகொண்ட 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :25 ஜூன் 2020, 6:52 am

DIN

பிகாரில் திருமணமான மறுநாளே மணமகன் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவத்துடன், திருமணத்தில் கலந்துகொண்ட 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பாட்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஹரியாணா மாநிலம் குர்கானில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் 15 ஆம் தேதி திருமணத்திற்காக அவர் குர்கானில் இருந்து தனி வாகனத்தில் திருமணம் நடக்கும் நவுபத்பூர் பகுதிக்கு வந்தார். 

தொடர்ந்து திருமணமான மறுநாள் மணமகன் உடல்நிலை சரியில்லாத நிலையில் பாலிகஞ்ச் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரை பாட்னாவில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், மருத்துவமனை வாயிலை அடையும்போது அவர் உயிர் பிரிந்துவிட்டது. பின்னர் அவருக்கு கரோனா பரிசோதனை எதுவும் செய்யப்படாமலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. 

திருமணமான மறுநாளே மணமகன் இறந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண சடங்குகள் செய்யும்போதே மணமகன் உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டதாக திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து மாநில சுகாதாரத் துறை தகவலறிந்து கிராமத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியது. மேலும், திருமணம் மற்றும் மணமகனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் முதலில் 125 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 15 பேருக்கு கரோனா இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும், 81 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. தற்போது வரை மொத்தமாக 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மக்களின் சுகாதார நிலைமை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரி டாக்டர் ராமானுஜம் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.