ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆந்திர மாநிலத்தில் தனியார் தொழிற்சாலையில் எரிவாயு கசிவு: ஒருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்

ஆந்திர மாநிலத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக ஒருவர் பலியானார். 

News image
Updated On :27 ஜூன் 2020, 2:30 pm

DIN

ஆந்திர மாநிலத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக ஒருவர் பலியானார். 

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தின் நந்தியாலா நகரில் ஸ்பை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று காலை தொழிற்சாலையில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குழாயில் இருந்து அமோனியா எரிவாயு கசிவு ஏற்பட்டது.

இதில் நிறுவனத்தின் பொது மேலாளர் எரிவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் 4 பேர் மருத்துவனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கர்னூல் மாவட்ட ஆட்சியர் வீரபாண்டியன் தெரிவிக்கையில், எரிவாயு நிறுவனத்திற்குள் மட்டுமே பரவியது, வெளியே அல்ல.

எனவே, மக்கள் பீதியடைய தேவையில்லை என்றார். அண்மையில் ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன ஆலையில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவு காரணமாக 11 பேர் பலியான நிலையில் தற்போது மீண்டும் ஒரு தொழிற்சாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.