மகாராஷ்டிரத்தில் புதிதாக 150 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 150 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 150 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
மகாராஷ்டிரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 150 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read


மகாராஷ்டிரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 150 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள் எண்ணிக்கை பற்றிய சமீபத்திய தகவல்களை மகாராஷ்டிர காவல் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி அங்கு கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 150 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதிப்புக்குள்ளான காவலர்கள் எண்ணிக்கை 4,666 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியான காவலர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com