அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோலி கொண்டாட்டத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி

கரோனா வைரஸ் தொற்று பரவுவதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

News image
Updated On :4 மார்ச் 2020, 6:23 am

DIN


புது தில்லி: கரோனா வைரஸ் தொற்று பரவுவதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், பொதுமக்கள் ஒரே இடத்தில்  அதிகளவில் கூடுவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடைபெறவிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியை ரத்து செய்வதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சீனா உட்பட உலகம் முழுவதும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,000ஐ எட்டியுள்ளது. சீனாவைத் தவிர்த்து உலக நாடுகளில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பு மூவாயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் தற்போது தில்லி மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்லாமல் இத்தாலியில் இருந்து ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்து தம்பதிக்கும் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.