தில்லி வன்முறை: உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் 

தில்லி வன்முறை குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
தில்லி வன்முறை: உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் 
Updated on
1 min read

தில்லி வன்முறை குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

வட கிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் ஏராளமான சொத்துக்கள் சேதமடைந்தன. இந்த வன்முறை தொடர்பாக தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

இந்த வன்முறை சம்பவத்தில் 47 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து மால்டா மாவட்டத்தில் நேற்று நடந்த பேரணியில் பங்கேற்று பேசிய மம்தா, தில்லி வன்முறையின் போது நிகழ்ந்த உயிரிழப்புக்கு பாஜகதான் பொறுப்பு. 

மேற்கு வங்கத்தில் எந்த நிகழ்வு நடந்தாலும் பாஜக விசாரணை கோருகிறது. இப்போது, தில்லி வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நீதி விசாரணையை நான் கோருகிறேன். தில்லி வன்முறையை மறைக்க கரோனா வைரஸ் விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com